9 செப்., 2008

பட்டுக்கோட்டை பாடல்-6: "உன்னை நினைக்கையிலே.."

உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி (உன்னை)

பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு
பொங்கிடும் காதல் தேன்குடமே!
தனந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்ரோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

வட்டக்கருவிழி மங்கையே - ஒளி
கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
கட்டுக்குலையாத பட்டுத் தளிர்மேனி
கண்ணில் அபத்தியம் காட்டுதே - இன்பக்
காவியத் தேனள்ளி ஊட்டுதே (உன்னை)

கருத்துகள் இல்லை: