27 நவ., 2008

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

வாடினேன்
வாடி வருந்தினேன்
மனத்தால் பெருந்துயர்
இடும்பையில் பிறந்து
கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன்
ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வென்னும் பெரும்பதம் திரிந்து
நாடினேன்
நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
- திருமங்கை ஆழ்வார் பாசுரம்

கருத்துகள் இல்லை: