2 டிச., 2008

கடிதம்-3: "முறைகேடுகளுக்கு தளமாகலாமா தமிழகம்?"

"அமெரிக்க டாலர்கள் அச்சடிக்க முயற்சி" என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, இந்தியாவில் அதிகமான கள்ளநோட்டுப் புழக்கத்திற்கு தமிழகம் தளமாக அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. மேலும், கொலைகள், கொள்ளைகள், தீவிரவாதிகள் நடமாட்டம், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், போதைப்பொருள் கடத்தல், போலி மது தயாரித்தல் என காவல்துறை "வேடிக்கைத்துறை"யாகி விட்டதால், தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரங்கள், அண்டை மாநில வெடிகளுக்கு வேடந்தாங்கள், சரணாலயம் என எண்ணற்ற முறைகேடுகளுக்கும் தளமாக அமைந்துள்ளது தமிழகம். இன்று போலி அமெரிக்க டாலர் அச்சடிக்கும் கும்பலுக்கு 'மதுரை' தளமாக அமைந்துள்ளதை அறிந்த தமிழர்கள் வேதனைப்படுகிறார்கள். - இரா.அசோகன், சென்னை.
தினமணி, மதுரை, நாளிதழில் "அன்புள்ள ஆசிரியருக்கு" பகுதியிலிருந்து.
நன்றி: திரு.இரா.அசோகன் மற்றும் தினமணி.

கருத்துகள் இல்லை: