23 மே, 2009

நெல்லையப்பன் கவிதைகள்-68: "விடை கொடுப்போம்!"

கனத்த மனத்துடன்
விடைகொடுப்போம்!
"அப்பாடா" என்று
உடன் வரும் பெருமூச்சை
தவிர்க்க முடியவில்லை!

ஓய்ந்து விட்டது
துப்பாக்கிச் சப்தம்
முடிந்து விட்டது
துவந்த யுத்தம்
இழந்தது போதும்
இரண்டு பக்கமும்

நல்ல தலைவன்தான்-
இலக்கை சரியாய்
தெரிவு செய்தவன்
பாதையில் பெரும்
பிழை செய்திட்டான்!

கிடைத்த வாய்ப்பையெல்லாம்
தவறவிட்டு இன்று
தலை குப்புற வீழ்ந்து விட்டான்

"நல்லதே ஆனாலும்
அடைய முடியாது
தவறான வழியில்"-
சரித்திரம் மறுபடியும்
எழுதிக் கொண்டது
அவனுடைய இரத்தத்தால் !

பிழை பல இருந்ததாலும்
மன்னிப்போம்
பிரியாவிடை கொடுப்போம்.
விடைகொடுப்போம்
தலைவனுக்கும் வன்முறைக்கும்.

கருத்துகள் இல்லை: