13 மே, 2009

இன்றைய சிந்தனைக்கு-45: "நித்திரைக்கு முன்" - திரு தங்கவேலு மாரிமுத்து

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே மானிடப் பிறவிக்கு மகத்தான பெருமை சேர்க்கும். ஒவ்வொரு நாளையும் நாம் எப்படிக் கழித்தோம், கழிக்கிறோம் என்பதைப் பற்றி தினமும் படுக்கப் போகுமுன் பத்துப் பதினைந்து நிமிடமாவது சிந்தித்துப் பார்க்கும் போதுதான், நமது வளர்ச்சியை நாமே அறியமுடியும். நமது தேக்கத்தை நாமே உணர முடியும். நமது வாழ்க்கையை நாமே அலச முடியும். நம்மை நாமே செதுக்கிச் சீராக்க முடியும். இன்றைய தினத்தைவிட, நாளைய தினம் சிறப்பாக அமைவதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இந்தப் பழக்கம் அமையும்.

முயன்று பாருங்கள், முன்னேற்றம் தெரியும்.

நன்றி: திரு.தங்கவேலு மாரிமுத்து.

கருத்துகள் இல்லை: