19 ஏப்., 2010

பிருந்தாவின் கவிதைகள்-3: வந்தது கோடை!

இல்லத்தரசிகளின் மேடையில்
பொதுக்கூட்டமாய்
எறும்புக்
கூட்டங்கள்.
புன்சிரிப்புடன் சிறுவர்களின்
முட்டுச்சந்தில்
மட்டைப்பந்து
.
குளிர்ந்தகாற்றுடன்
வியர்வை
ஊற்று.
மக்களின் திண்டாட்டத்துடன்
குளிர்பானக்கடைகளின்
கொண்டாட்டம்
.
பருத்திஉடையுடன்,
கறுப்புக்குடையுடன்
வந்தது கோடை!

கருத்துகள் இல்லை: