29 ஜூன், 2010

யோக சித்தி-27: இயற்கை-3

கதிராற்   கடன்முகந்து,  கார்மேக  நல்கி,
இதஞ்செய்  இயற்கை  என்றாய்!  

இயற்கை  எமது  அன்னை, இறைவன் தந்தை.  இயற்கை  உலகன்னை, அவன் உலகிற்கு  இதஞ்  செய்கிறாள்;  இனியன  செய்கிறாள், எப்படி?  உலகம்  வாழ  முதலில்  வேண்டுவது  மழை.  கதிரவன்  கிரணங்களாற் கடலை முகந்து,  மழை மேகத்தைத்  தருகிறாள் இயற்கை.  அந்தக்  கார்மேகம்  குளிர்காற்றுப்பட்டு  மழை  பொழிகிறது, மண் செழிக்கிறது, பயிர் தழைக்கிறது.  உயிர் பிழைக்கிறது.      

கருத்துகள் இல்லை: