20 செப்., 2010

யோக சித்தி-39: உலக வாழ்வு-5

அகில  வாழ்வத்தனையும்  ஆன்ம  விரிவாக
நிகழுவதே  உண்மை  நிறைவு.

இந்த உலக வாழ்வெல்லாம்  ஆன்மாவின் விரிவாக இயலுவதே உண்மையான பூரணத் தன்மையாகும்.  மனித வாழ்வு தெய்வ வாழ்வாக நிறைவேற்ற வேண்டும்.  உலகம் ஆனந்த நிலையமாக வேண்டும்.  அதற்கு வழி என்ன?  மனிதனிடம் குடிகொண்டுள்ள தெய்வானந்தத்தைத் தேடியடைய வேண்டும்.  அந்தத் தெயவானந்தமே, சுத்தான்மாவாக ஒவ்வோருள்ளத்தும்  விளங்குகிறது.    

கருத்துகள் இல்லை: