23 செப்., 2010

யோக சித்தி-41: அறம் -2:

மன்னு  மனச்சாட்சி  மன்னவன்சொல்  என்னவென
உன்னி  நடத்தல்  உயர்வு.

நமது  உள்ளம்  அரியணை;  அதில்  ஒரு  மன்னவன்  மன்னியுல்லான்;  என்றும்  நிலை பெற்றுள்ளான்.  அவன் நமது  பேச்சுக்களையும்,  நடத்தைகளையும்  உடனிருந்து  கவனிக்கிறான்.  அவன்  நல்லதைச் சொல்லுகிறான்.  அவன்  என்ன  சொல்லுகிறான்  என்று  நெஞ்சைத் தொட்டுப் பார்த்து,  நன்றாக  உன்னிப்  பார்த்து  ஆராய்ச்சியுடன்  நடத்தலே  மிகவும்  மேலானது.    

கருத்துகள் இல்லை: