16 அக்., 2010

யோக சித்தி-48: அறவிரிவு -4

தொடர்ந்தாரின்  துன்பம்  துடைக்காத  செல்வன்
கடமை  வழுவியோன்  காண்.

நாகரிகம்  பெற்ற  செல்வன்,  சுகபோகங்களைச்  சுயனலத்திர்கே  பயன்படுத்தாது,  தன்னைத்  தொடர்ந்த,  தன்னினமான,  மாந்தரின்  துன்பத்தைத்  துடைக்கப்  பயன்படுத்தவேண்டும்.  அவர்களுக்குற்ற  இடர்களைத்  தன்னால்  இயன்ற  மட்டும்  தவிர்க்கவேண்டும்.  இன்றேல்,  அவன்  தனக்குரிய  கடமையினின்று  வழுவியோனாவன்.    

கருத்துகள் இல்லை: