1 நவ., 2010

யோக சித்தி-60: பொதுநலம் -1

பிறர்க்கென  வாழும்  பெரியாரைச்  சேருந்
துறக்குமுங்  காணாச்  சுகம்.

துறக்கமாவது  சுவர்க்கம், மோக்ஷம்.  அதன்  இன்பம்  பெரிதுதான்.  அதை  விடப்  பெரிய  இன்பம்  ஒன்றுள்ளது;  அதுவே,  எல்லா உயிர்களையும்  தான்  என்றெண்ணி  அன்பு  செய்யும்  ஆனந்தம்!  அந்த  இன்பம்  யாரைச்  சேரும்?  தன்னலம்  விட்டுப்  பிறர்  நலமே  போற்றி,  அறப்பணி செய்து  வாழும்  பெரியாரையே  அந்த இன்பம்  தானாக  வந்தெய்தும். 

கருத்துகள் இல்லை: