26 ஜூன், 2018

சிறுகதை நேரம்-3: ஜெயமோகனின் மெல்லிய நூல்

சிறுகதை நேரம்-3: ஜெயமோகனின் மெல்லிய நூல்

ஜெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. தொடர்ச்சியாக இணையதளத்திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது தமிழிலக்கியச் சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாகும்.
இக்கதைகள் பின்னர் நூலாக வெளிவந்தபோதும் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் உள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள் ஆகியவை தனிநூல்களாக வெளிவந்துள்ளன யானைடாக்டர் இலவசப்பிரதியாகவும் வினியோகம் செய்யப்பட்டது. தன் ஐம்பது வயதை ஒட்டி அறவிழுமியங்கள் மீது உருவான ஆழமான அவநம்பிக்கையை வெல்லவே இக்கதைகளை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதைகளில் உள்ள நாயகர்கள் உண்மையான மனிதர்கள். அவர்களின் அறத்தில் ஊன்றிய பெருவாழ்க்கையைச் சொல்வதன் வழியாக தன் நம்பிக்கையை மீட்டுக்கொண்டதாகச் சொல்கிறார். 



நன்றி: திரு ஜெயமோகன் அவர்கள், Tamil Audio Book and YouTube.

கருத்துகள் இல்லை: