31 ஆக., 2018

குட்டிக்கதை-7: ஞானச்சிறுவன்

ஒரு உண்மைக் கதை

தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _
தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் -

அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது -

கிறிஸ்த்துவப் பாதிரியார் ஒருவர் மெகா போனை வைத்துக் கொண்டு மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் -

அந்தப் பிரசங்கத்தில் இந்து மதக் கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக -
"ஏ.,.மானிடர்களே, நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல், உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல், நீங்கள் வணங்கும் கடவுள் அதுவும் கல்," -
"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் " -

அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை -

என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார் -

இடையில புகுந்த அந்தச் சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி _

"எனக்கொரு சந்தேகம், கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்க -

அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இந்தச் சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான், நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகி உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார் -

சிறுவன் கேட்டான் -

நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்? -

" தங்கை என்போம், தமக்கை என்போம், சகோதரி என்போம் - என்றார் பாதிரியார்_

"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்?" _

"தாய் என்போம், அன்னை என்போம், அம்மா என்போம்" -

"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை?" -

"மனைவி என்போம், துணைவி என்போம், இல்லத்தரசி என்போம்" -

இந்த மூன்று உறவும் உங்களுக்கு இருககிறதா?--

"தெரிந்துதான் கேட்கிறாயா? சிறுவனே _
தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது -
என்ககுத் தாயும், இருக்கிறார் மனைவியும், இருக்கிறார் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார் -

"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா?" என்று அந்தச் சிறுவன் கேட்டான் -

பாதிரியார் "ஆமாம்" என்றதும் -

"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய் தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும் வித்தியாசமும் இருக்கிறதா? இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா?" என்றதும் -

மெகா போன் கீழே விழுகிறது,
பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது -
கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர் -

பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் முன் வந்து -
"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை, என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது", -

"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின் ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல -

"பிற மதத்தைக் குறை சொல்லி உங்கள் மதத்தை வளர்க்கப் பார்க்காதீர்கள்" -

உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள் -
பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும் அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள் -
மேலும், எல்லா மதத்திலும் மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன் -

ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில் அவர் படித்தது?-
இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக் கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும் -

அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல -

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான்

கருத்துகள் இல்லை: