4 ஜன., 2019

இன்றைய சிந்தனைக்கு-301:

*ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்..

*அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.*

*கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது.*

*முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார்.*

*பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் .*

*அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,*

*மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி....*

*அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.*

*அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல்,*

*மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு...

*கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் என்று கூறினார்.*

*அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இன்று வரை கட்சிகள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து....,*

*மக்களை கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ளனர்.*

கருத்துகள் இல்லை: