20 மார்., 2020

தியானம் செய்வீர் !

*வாழ்க்கை மலர்கள்: மார்ச் 20*

*தவத்தின் பயன்கள் பத்து*

1. மனித வாழ்வின் பெருநிதியாகிய கருமையத்தை தூய்மையாகவும், வலுவுடையாதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாகவும் மேம்பட உதவுகிறது.

2. மனிதனின் இறையுணர்வும், உயிர் விளக்கமும், அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாக்கும்.

3. மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது.

4. எண்ணம், சொல், செயல்களில் தவறு செய்யா விழிப்பு நிலை மேலோங்குகிறது.

5. அறிவின் திறன்கூடி அதன் கிரகிக்கும் சக்தி கூடுகிறது.

6. ஒத்துப் போதல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகள் மலர்கின்றன.

7. அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ளத் துணைபுரிகிறது. 

8. ஆக்கப் பூர்வமான செயல்களை ஆற்றும் திறன் ஓங்குகிறது.

9. தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி மூலம் உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.

10. நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
    K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

கருத்துகள் இல்லை: