29 ஏப்., 2020

எஸ்ரா வாசகியுடன்

எஸ். ரா. சார் கிட்ட பேசணும் என நினைத்தது உண்டு... 2019 மதுரை புத்தக கண்காட்சியில் பேசும் வாய்ப்பு அமைந்தது...  ஒவ்வொரு எழுத்தாளர் களுக்கும்  மாஸ்டர் பீஸ் புத்தகம் இருக்கும்... 

அப்படி இவரிடம் நான் மாஸ்டர் பீஸ் என நினைத்த புத்தகங்கள்...

1. உப பாண்டவம்... ஆத்தி படிக்க படிக்க நம் வரலாற்று ஆசான்களும் விதி விலக்கல்ல... அவர்களும் மனிதர்களின் வலிகளை, சல்லி தனத்தை அடைந்த பிறப்பு தான் என சார் சொல்லிய விதம் எல்லாம் அட்டகாசம்... 

2. சஞ்சாரம்... நாதஸ்வரம் மீது எத்தனை காதல் வந்தது என்று சொல்ல முடியவில்லை... நாதஸ்வர வித்துவான்கள் போன்ற மனிதர்களை  எல்லாம் நாம் இழந்து நிற்கும் தலைமுறை...

ஒரு இசை கருவி கூட கற்று கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் இப்ப வரை உண்டு... 

இப்படி பல புத்தகங்கள் சொல்ல முடியும்... ஆனால் இவரது எழுத்து எல்லாம் வேற லெவல்... 

சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள் சார்...

நன்றி: Ms காயத்ரி மஹதி, முகநூல்.

கருத்துகள் இல்லை: