31 ஜூலை, 2020

மலரும் நினைவுகள்!

நாவில் எச்சில் ஊறுகிறது! 

மதுரையில் பள்ளியி்ல் பயின்ற காலம்.  நியூ சினிமா தியேட்டருக்கு அருகே சைக்கிளில் கூடை கட்டிக்கொண்டு வந்து மாங்காய் விற்பார் ஒருவர்.  

முதலில் ஒரு பாத்திரத்திலிருந்து தாளித்த கடுகு எண்ணெயுடன் இருக்கும்; அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு சிரட்டையில் விடுவார்.  அந்த ஸ்பூனாலேயே கடுகை நன்றாக மசித்துவிட்டு, 
பச்சரிசி மாங்காய்த் துண்டுகளை சிரட்டையில் அள்ளிப் போடுவார். அளவான மிளகாய்த்தூள்,  உப்பு.  ஒரு கரண்டியினால் நன்றாகக் கிளறுவாா்.  

ஒரு தாளில் அப்படியே கொட்டிக் கொடுப்பார். 

அதுபோன்ற மாங்காயை இன்று வரை சாப்பிட்டதேயில்லை. 

கருத்துகள் இல்லை: