17 செப்., 2020

இன்றைய குறள்

குறள் : 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்

மு.வ உரை :
மேலோர்  உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து  (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

கலைஞர் உரை :
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

Kural 627 Explanation :

The great will not regard trouble as trouble  knowing that the body is the butt of trouble.

கருத்துகள் இல்லை: