31 அக்., 2020

சிந்திக்க விரும்பும் சிலருக்காக : நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்கள்

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
 ​​
அப்போது சில விஞ்ஞானிகள்  அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.  

அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக....
விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது. 
 
ஒரு பெரிய விஷப்பாம்பு கைதிக்கு  முன்னால் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து... அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலியில் அந்த நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி ஒரு துணியால்... கண்களை கட்டினர்.

அதன்பின் அந்தக் கைதி மீது இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.

அந்தக் கைதி அலறியபடி... இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போனார்..!
 
பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.

அந்த விஷம் எங்கிருந்து வந்தது ? அல்லது கைதியின்  மரணத்திற்கு வேறு என்ன காரணம்?

அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது !

இதில் இருந்து நம் சித்தர்களின் குரல் முக பக்க நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் இதுதான்....

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது, 

அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.
 
90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் தற்போது... கொரோனா கால நெருக்கடியில் இருக்கிறோம். அரசாங்க பட்டியல்கள்  நம்மை பதற வைக்கலாம். 

இந்த அறிக்கைகளை கண்டு அச்சம் கொள்ளாமல்... நேர்மறை எண்ணம் கொள்வோம்.  அதுதான் இப்போதைக்கு  நமக்கான நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

நான் இப்பவும் சொல்கிறேன்... 
கொரோனாவை நம்பாமல்... ஏளனமாக நினைக்கும் எவருக்குமே  இனி கொரோனா வரப்போவதில்லை..!
அல்லது... வந்து விட்டு, வந்த தடம் தெரியாமலே கூட சென்றிருக்கக்கூடும்..!  

கொரோனா மீதும், உலகில் பரப்பப்படும் வதந்திகள் மீதும்.. எனக்கு சிறிதும் நம்பிக்கை இருந்ததில்லை... என்றாலும் அதை நம்பியிருப்பவர்களுக்குத்தான்  இப்பதிவு..

கொரோனா வீரியத்தின் பாதிப்பினால்தான் உலகில் இறப்பு பட்டியல்கள் நீள்கிறதா என்றால்... 
அதன் பிரச்சார பயத்தினால்தான் பல உயிர்கள் போகிறது என்பேன்..!!!  

கொரோனா வந்தால் செத்துவிடுவோம் என்று நினைத்தாலே போதும்... கண்டிப்பாக கொரோனாவும் வரும், கூடவே  சாவும் வரும்...!!!!  

கொஞ்சம் பச்சை தண்ணீரை ஒரு சிறிய  பாட்டிலில் அடைத்து... இதுதான் கொரோனாவுக்கான வேக்சின் என்று கூறி.. சில பில்கேட்சுகள் மூலம் 240ரூபாய்க்கு  நமக்கு ஒரு இஞ்சக்‌ஷன் செலுத்தப்பட்டால் கூட... ஆஹா... தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற அந்த நம்பிக்கையின் காரணமாக கூட கொரோனா நம்மை தாக்காமல் இருக்க கூடும்.! 

நேர்மறையான எண்ணங்கள் மனதில் இருந்தாலே  நோய் எதிர்ப்பு சக்தி தானாக  அதிகரிக்கும். மனவளம், உடல்நலம் கூட்டும். (பாதுகாப்புடன்) நம்பிக்கையுடன் 
போராடி கொரோனாவை வெற்றிக்கொள்வோம்.....

நன்றி :

கருத்துகள் இல்லை: