வேதாத்திரிய மெய்விளக்கம்
*அறிவு தெளிவாக இருக்க - உறுதியோடு இருக்க - திறமையோடு இருக்க - வாழ்க்கையில் நிறைவு பெற - உளப்பயிற்சி தேவை.*
*தேவை இல்லாததையெல்லாம் வேண்டி, தேவையுள்ளதை எல்லாம் மறந்து போவதனால், தேவையுள்ளதைத் தேடுவதற்கே நமக்கு ஆற்றல் இல்லாது போகிறது.*
*இது எதனால் வருகிறது? இந்நிலை அறிவின் வறுமையினால் தான் வருகிறது. அறிவு தெளிவாக இருக்க வேண்டும். உறுதியோடு இருக்க வேண்டும். திறமையாக இருக்க வேண்டும். அத்தகைய திறமை வந்துவிட்டால் வாழ்க்கையில் நிறைவு வரும்.*
*அனுபவம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே தவற்றைத்தான் செய்கிறோம்.*
*நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மனதில் கொண்டு, "இனி இதைச் செய்யக் கூடாது. அதைத்தான் செய்ய வேண்டும். இந்த அளவில் தான் செய்ய வேண்டும்" என்று தேர்ந்து, தீர்வு கண்டு, அதன்படி செயல் ஆற்ற முடியாதா? முடியும்.*
*அந்த ஆற்றல் இருக்கிறது. அனால் செய்வதில்லை.
*ஒரு பூட்டைத் திறக்க வேண்டும் என்று சொன்னால், அந்தப் பூட்டுக்குரிய சாவியைக் கொண்டு முறையாகத் திறந்தால் தான் திறக்க முடியும். ஆனால் வேறு சாவி போட்டுத் திறந்தால் என்னாகும்?*
*அதே போல ஏதோ ஒன்றை நாம் நினைக்கிறோம். அதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நமக்குத் தெரிய வேண்டும். முதலாவது நாம் வேண்டுவது சரிதானா? தேவைதானா? என்றே தெரியவில்லை.*
*எத்தகைய சூழ்நிலையிலும் நம் மனம் எடுக்கும் முடிவானது தீர்மானமான முடிவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கும்கூட மனதின் விழிப்பு நிலை வேண்டும்.*
*அதற்காக நம் மனதிற்கு நாம் கொடுக்கக் கூடிய முறையான ஓர் உளப்பயிர்ச்சியின் மூலம் தான் இவையெல்லாம் சித்தியாகும்.*
*எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.*
*அத்தகைய அகத்தாய்வுப் (Introspection) பயிற்சிகளையும், மனம் செம்மையுற அகத்தவப் பயிற்சியாகிய எளிமைப்படுத்தப்பட்ட "குண்டலினி யோகத்தையும்" முறையாக செய்து வரவேண்டும்.*
*இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் "மனம்" எவ்வளவு தெளிவாக இருக்கிறது? என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.*
*அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதையும் அனுபத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.*
*அறுகுணச்சீரமைப்பு*
விருப்பம், சினம், வஞ்சம்மதம் பால்கவர்ச்சி
விளைவறியா கடும்பற்று என்ற ஆறும்,
உருக் குலைந்து நிறைந்த மனம், சகிப்புத்தன்மை
உளமார்ந்த மன்னிப்பு, மெய் உணர்வு,
கருத்துடைய கற்பு நெறி ஈகை என்ற
களங்கமிலா நற்குணங்க ளாக மாற்றும்,
பொருத்தமுள உளப்பயிற்சி முறை பயின்று,
புகழ் இன்பம் அமைதி பெற வாரீர் ! வாரீர் !.
(ஞானக்களஞ்சியம் கவி: 1592)
*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*
~தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக