21 ஜூலை, 2021

மகரிஷியின் சிந்தனைகள்

ஏழ்மை எழக் காரணம்

மனிதனுக்கு ஏழ்மை என்பது மூன்று வழிகளில் உண்டாகலாம். 

1) அவன் வாழ்வில் உள்ள வசதிகளை வீணான வழிகளில் செலவு செய்து அழித்து விடுவது

2) அன்றுள்ள சமுதாய அமைப்புக்கும், தனிமனிதன் தேவைகளுக்கும் ஒத்தவாறு பொருள் உற்பத்தித் திறனைக் கற்றுக் கொண்டு, அதை முறையாகச் செய்யாத சோம்பேறித்தனம்

3) உழைப்பினாலும், அறிவின் திறமையாலும் ஒருவர் உற்பத்தி செய்யும் பொருட்களை உழைக்காமலே அநீதியான வழிகளில் பிறர் பறித்துண்ணல்

இம்மூன்று வழிகளையும் ஆராய்ந்து தெளிந்து கொண்டால் தனிமனிதன் முயற்சியையும், சமுதாயக் கூட்டு அமைப்பின் கருத்துக்களையும், இணைத்துச் சிந்தித்துத் திட்டமுட்டு, எந்தக் குறையுமின்றி, எல்லோரும் பொருள்வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

நன்றி :

கருத்துகள் இல்லை: