29 ஜூலை, 2022

ஆன்மீக சிந்தனை

இன்று காலை நான் படித்த சேக்கிழாரின் பாடலைப் பகிர்கிறேன் .
 ♦♦


"பெருமையால் தம்மை ஒப்பார்
     பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
     ஊன்மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
      அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
      இவரைநீ அடைவாய் என்று .
///////////////

பொருள் சுருக்கமாக:♦

சிவனடியார்கள் என்போர் பெருமையைச் சொன்னால் அவ்வகையில் அவர்களுக்கு நிகரானவர்கள் அவர்களே .
எம்மைப் போன்ற அன்பர் கூட்டத்தை அன்பால் ஈர்த்தவர்கள் .

மானுடம் ஒன்று [ சிவனடியார்கள் எக்குலமானாலும் ஒன்றே ] என்ற ஒருமையுணர்வால் உலகையே வெல்பவர்கள் . குறையொன்றும் இல்லாதவர்கள் . அருமையான நிலையில் நிற்பவர்கள் . அன்பின் வழியாக இன்பத்தை நுகர்பவர்கள் . நல்வினை தீவினை முதலான இருவினைகளால் பாதிக்கப்படாதவர்கள் . இவர்களை நினைந்து வாழ்வோம் . ♥♥

நன்றி :
திரு ராம்மோகன்ராஜ்,
சிதம்பர ராஜ்யம் வாட்ஸ்அப் குழு

கருத்துகள் இல்லை: