27 நவ., 2022

படித்ததில் பிடித்தது

இரண்டிற்கும் வித்தியாசம்,
வயது மட்டுமே...

35 வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*

கண்ணன் என்பது செல்ல பெயர். 
குழந்தை பருவம்.

கிருஷ்ணன் என்பது வளர்ந்த  பிள்ளை.  
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து , 
குளித்துக் கொண்டிருந்தேன். 

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை.  கண்ணை திறக்க முடியாமல், 
இரண்டு கையாலும், 
என்னை சுற்றி , சுற்றி, 
சொம்பை, தேடினேன். 

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.  

எனக்கு புரிந்து விட்டது. 

 சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. 

 எனக்கு , கண் எரிகிறது 
என்று அவளுக்கு தெரியவில்லை. 

 நான் , சொம்பை தேடுவதில்,
 அவளுக்கு ஒரு ஆனந்தம். 

இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.

தற்போது , எனது கண்ணில் , 
ஒரு தூசி  விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.  

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை , 
மறைத்து வைத்து... 
அவர்கள் தேடுவதை கண்டு 
ஆனந்தப் பட்டான்.

அதே கண்ணன்
கிருஷ்ணனாக  மாறும் போது.... 

மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து, 
அவள் மனதை,  காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....

கண்ணன்  சிறு பிள்ளையாக இருக்கும்போது....

நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். 
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என , 
பொய்யும் சொன்னான்...

அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....

திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது , 
என  கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.

அருமையான கருத்துக்கள் செரிந்த பதிவு. *Simple but beautiful*..👌👌👌

சர்வம் *கிருஷ்ணார்ப்பணம்*..

நன்றி :
முனைவர் 
பி ஜி பாலகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: