27 ஜன., 2024

கவிதை நேரம்


                     பதில் : 
      ஆத்மாநாம் கவிதை

குற்றுகர முற்றுகர சந்திகளை
 
சீர்சீர் ஆய்ப் பிரித்து
 
தளை தளையாய் அடித்து
 
ஒரு ஒற்றை வைத்து
 
சுற்றிச் சுற்றி வந்து
 
எங்கும் மை நிரப்பி
 
எழுத்துக்களை உருவாக்கி
 
பொருளைச் சேர்த்து
 
வார்த்தைகள் ஆய்ச் செய்து
 
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
 
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
 
ஏதாவது சொல்லியாக வேண்டும்
 
நமக்கேன் வம்பு.

கருத்துகள் இல்லை: