14 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-3: "காலொடிந்த ஆட்டுக்காகக் ..."

காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்,
கடல்போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்,
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு.
காதில் மட்டும் கேட்டு அதை
ரசிச்சாங்க - ஆனா
கறிக்கடையில் கணக்கைப்
பெருக்கி வந்தாங்க.

கருத்துகள் இல்லை: