24 செப்., 2008

நாலடியார்-2: "கல்லாரே ஆயினும்..."

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாலுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒன்னிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

படிக்காதவர் ஆயினும் படித்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், நல்லறிவு வாய்க்கப்பெறும். அழகும், மணமும் நிறைந்த பாதிரிப்பூ வைத்திருந்த பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் பூவின் மணம் கிடைப்பதைப்போல.

கருத்துகள் இல்லை: