29 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-34: "அமாவாசைச் சந்திரன்"

தொப்பை இல்லா போலீஸ்
சொத்து இல்லா மந்திரி
அரியர் இல்லா மாணவன்
மீசை இல்லா தாதா
தண்ணி இல்லா பால்
வன்முறை இல்லா சினிமா
வசூல் இல்லா கட்சி
குழி இல்லா ரோடு
ஜாதி இல்லா அரசியல்
படபடப்பு இல்லா முதலிரவு
வரிகட்டும் வியாபாரி
ரேஷன் கடை எடை
நேரத்தில் வரும் ரயில்
தமிழ் பேசும் நடிகை
சிந்திக்க வைக்கும் சீரியல்
ஜி-எச் சுத்தம்
போட்ட பட்ஜெட்டில் புதுவீடு
அறிவித்த நேரத்தில்
கட்சிப் பொதுக்கூட்டம்
லாபம் தரும் இலக்கிய இதழ்
கவிஞர்களுக்குள் ஒற்றுமை.

கருத்துகள் இல்லை: