3 அக்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-38: "கவிதையின் நீரோடை"

கொஞ்சம் முகம் பார்த்து
தலை சீவ ஒரு சந்திரன்.
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று
அசைபோட ஒரு லாயம்.
என் கையெழுத்துப்
பிரதியில் கண்நோடமுகங்
கொள்ளும் - ஆனந்தச் சலனங்கள்.
நான் காண - ஒரு பெண்.
சிந்திக்கையில்
கோத ஒரு வெண்தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடிமனத்தில் கவிதையின் நீரோடை.

- சுந்தரராமசாமி

கருத்துகள் இல்லை: