15 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-26: "விடியல்"

மாலையா
மலர்ச்சரமா
மலர் வளையமா
அர்ச்சனை உதிரியா
உதிரும் சருகா -
சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?

மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
முதலாவது நிச்சயம் வரும்
என்றாவது ஒரு நாள்.
இரண்டாவது
வருமா, வராதா?

இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?

அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!

கருத்துகள் இல்லை: