4 டிச., 2008

கடிதம்-5:"துப்பாக்கி முனையில் தேர்தல்!"

துப்பாக்கி முனையில் தேர்தல் நடத்தவேண்டிய நிலைமை வேதனை அளிப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் தேர்தலைத் தடுக்க பல சாலைகளில் நக்சலைட்டுகள் தடை ஏற்படுத்தினர். அதனால், ஹெலிகாப்டர், சிறு விமானங்களில் வாக்குச்சாவடிக்கான பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதுபோல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கும் வன்முறை, எதற்கெடுத்தாலும் வன்முறை, போராட்டம். தீவிரவாதத்திற்கு அஞ்சியே மக்கள் வாழவேண்டியுள்ளது. இது என்ன ஜனநாயக நாடா? - வா.ரா.சண்முகம், திருப்பத்தூர்.
தகவல்: தினகரன் நாளிதழ், மதுரை, டிசம்பர் 2, 2008.
நன்றி: திரு சண்முகம் & தினகரன்.

கருத்துகள் இல்லை: