21 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-67: "பூக்களைப் பறிக்கலாம்"

பூக்களைப் பறிக்கலாம்

பூஜைக்கு, பூவையரின் குழலுக்கு,
மாலையாய் திருமணத்திற்கு,
மலர்க்கொத்தாக வாழ்த்த,

மலர் வளையமாக அஞ்சலி செலுத்த,
ஜாடிகளை அலங்கரிக்க, காதுகளில் சுற்ற,
பூமாரி பொழிய, மலர் மஞ்சமாக,
வாசனை திரவியமாக - என்று

மலர்கள் இத்தனை பலன் தர,
பூக்களைப் பறிக்கக் கூடாது
என்று சொல்லுமுன்,
கேட்டீர்களா அது பூவிற்கும்
சம்மதம் தானா என்று?

செடியிலேயே செத்துப்போக
சத்தியமாய் மலருக்கு
சம்மதம் இருக்காது.

மதுவை மட்டும் எடுத்துக்கொண்டு ,
மலர்களை தேனீக்கள்
செடியிலேயே விட்டுச் செல்ல,

வாசனையை மட்டும்
தன்னோடு எடுத்துக்கொண்டு,
காற்றோ, மலர்களை உதிர்த்துச் செல்ல,
தொலைவிலிருந்தே வண்ணங்களை
சூரிய, சந்திரர்கள் ரசித்துப் போக,
மனிதன் கண்ட பயன்பாடு மட்டுமே
மலர்களுக்கு பெருமை சேர்க்கும்.

நேசிக்கும் பூக்களை
செடியிலேயே விட்டுவிடுவது,
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமையாக இருக்கலாம்-
ஆனால் மலர்களுக்கு அல்ல.

செடிக்கு மலர் என்பது
வயதுக்கு வந்த மகள்;
மகளை தன்னுடனேயே
வைத்துக்கொள்ள
விரும்புவாளா தாய்?

மனிதனுக்கு கிடைத்த
வரங்கள் மலர்கள்;
வரங்களை வீணாக்கலாமா?
பூக்களைப் பறிப்போம்
அவை பிறந்த பயன் எய்த.

2 கருத்துகள்:

nellaiappan சொன்னது…

COMMENTS FOR THIS POEM
IN TAMIL தமிழ் COMMUNITY (ORKUT).

Annie
nice! something different! Mar 23

Thenmozhi
wonderful thoughts....! Mar 23

KIRUTHIGA
nice... Mar 24

Anamika
ur way of thinking very nice ma ..


THANK U Annie, Thenmozhi, Kiruthika & Anamika
-NELLAI.
-

kovai sathish சொன்னது…

பூக்களை பறிக்கலாம் என்று பொய்யாக சொல்லி மனங்களை பறித்துவிட்டீர் நண்பா..!!?
Superr