26 பிப்., 2010

யோக சித்தி-13: அருள் விளக்கம்-3

ஒன்றென்றும் தோற்றம் ஒடுக்கம் அதிலேயே
கண்டவனே காட்சிக் கிறை.

ஐந்தொழிலும் புரிந்து உலகாடலை நடத்தும் அருட்சக்தி, தெய்வசக்தி ஒன்றே. உலகம் தோன்றி, வளர்ந்து, முதிர்ந்து அடங்குவதும் அந்த ஒன்றிலேதான். இவ்வாறு இறைவன் சக்தி ஒன்றே எங்குமாய், எல்லாமாய், எதற்கும் பிறப்பிடமாய் ஒடுங்கிடமாய் நிற்பதென்று அறியும் ஞானியே அறிவிற் பெரியவனாவான்.

கருத்துகள் இல்லை: