28 நவ., 2011

பிருந்தாவின் கவிதைகள்-6: அம்மாவின் பிறந்தநாள்

இன்று பிறவி எடுத்தாய்!
எங்களை ஈன்றபோது மறுபிறவி எடுத்தாய்!!
எங்களை உருவாக்க உழைத்து உருகி
மறைந்தே போனாய்!
விலைமதிப்பற்ற தாய் அன்பை தொலைத்தாலும்
உன் வயிற்றில் உதித்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளே!!
நீ கொடுத்த இந்த உடலையும்
உன் இனிய நினைவுகளையும்
சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நீ கண்ட கனவுகளை நனவாக்க!!!

(நவம்பர் 27 அன்று எழுதியது)  

கருத்துகள் இல்லை: