மேரி கியூரி வாழ்க்கை வரலாறு
14,917 views
TAMIL FIRE
Published on Jan 6, 2015
மேரி கியூரி அம்மையார் வாழ்க்கை வரலாறு
1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்று (2005ஆம்
ஆண்டு ) வரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல்,
வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக
பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி
கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை
வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார்
ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே
அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத
ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று
கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. சமவாய்ப்பு வழங்கப்பட்டால்
ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும்
நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி.
திருமதி மேரி கியூரி அவர்களின் நினைவைப்போற்றுகிறேன்.
Tamil Fire மற்றும் யுடியூபிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக