17 நவ., 2020

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #984: நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்
சிவமொன்றி யாய்பவ ராதர வால்அச்
சிவமென்ப தானெனுந் தெளி வுற்றதே.

விளக்கம்:

‘நமசிவாய’ ‘சிவாயநம’ ஆகிய இரண்டு மந்திரங்களுமே உயிர்கள் சிவமாவதற்குரிய மந்திரமாகும். இந்த ஐந்தெழுத்துக்கள் நிலைபெற்ற இறைவனின் திருவடிப்பேற்றைத் தரும் மெய்யுணர்வு ஆகும். இந்த மெய்யுணர்வு பெற்று சிவத்துடன் சேர்ந்த ஐந்தெழுத்தின் உண்மையால் பேரன்பு பூண்டவர்கள் தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவு உண்டாகி தானே சிவமாகத் திகழ்வார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: