1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று எழுதிய இரங்கல் கவிதை கீழே :
சீரிய நெற்றி எங்கே?
சிவந்த நல் இதழ் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குவலயம் போனதெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன் நடைதான் எங்கே
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட
தாயே எனக்கொரு வரம் வேண்டும்
தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்
சாவே உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?
தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?
தெய்வமே உன்னையும் நாம் தேம்பி
அழ வையோமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக