குறள் : 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
மு.வ உரை :
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல் தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
கலைஞர் உரை :
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.
Kural 720
Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar
Allaarmun Kotti Kolal
Explanation :
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக