18 டிச., 2020

இன்றைய குறள்

குறள் : 720

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

மு.வ உரை :

தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல்  தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

கலைஞர் உரை :

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை :

தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Kural 720

Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar
Allaarmun Kotti Kolal

Explanation :

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

கருத்துகள் இல்லை: