29 ஜன., 2021

இன்றைய குறள்

குறள் : 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்

மு.வ உரை :
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

கலைஞர் உரை :
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை :
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Kural 749
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan

Explanation :
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

கருத்துகள் இல்லை: