28 பிப்., 2021

கருத்து மேடை

இந்த வண்ணத்துப் பூச்சியின் 
சிறகுகள் உதிர்ந்ததால் மீண்டும் 
மண்ணில் ஊர்கிறது புழுவாக....
நாடி நரம்புகள் தளர்ந்தாலும்
தன்னம்பிக்கை தளராமல்
மனதால் இன்னமும் பறக்கிறது!
யாசிக்காமல் வாழ்வதற்காக
வீதியில் யோசிக்காமல் காய்கிறது!

இவர்களைப் போன்றவர்களிடம் உங்கள்
அன்பையும் நேரத்தையும் பணத்தையும்
செலவு செய்யுங்கள். இவர்களிடம் பொருட்களை வாங்கும் போது இவர்களின் அன்பும் வாழ்த்துக்களும் உங்களுக்குக் கிடைக்கும். மிகவும் நன்றிகள் 🙏🙏🙏

-கல்யாணி சிவம்

நன்றி :

கருத்துகள் இல்லை: