22 செப்., 2023

சுற்றுச்சூழல்

#மூங்கில் தினம்

பச்சைத் தங்கம்... ஆக்சிஜன் உருளை மூங்கில் 24 நான்கு மணிநேரமும் ஆக்ஸிஜன் தருகிறது சிறந்த காகிதம் தயாரிப்புக்கு உகந்த மரம்

(குறிப்பு #தைலமரங்கள் காகித பயன்பாட்டிற்காக வளர்க்க படுகிறது அதற்கு மாற்றாக இம்மரங்களை அரசு வளர்க்க வேண்டும்)

செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.

புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது

இதனால் மூங்கில் சார்ந்த பல தொழில்கள் உருவாகியுள்ளன. சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகவும் மூங்கில் பயன்படுகிறது. WBC-யின் முக்கிய குறிக்கோள், மூங்கிலை வைத்துப் பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான்.

மூங்கிலை வைத்து, பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான் WBC-யின் முக்கிய குறிக்கோள்.
அழகு சாதன பொருள்கள் தயாரிக்க இதன் திரவம் பயன்படுகிறது. விளையாட்டுப் பொருள்கள், மூங்கில் சைக்கிள், ஹெல்மெட், ஆடைகள் போன்றவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன.

நம் நாட்டில் மூங்கில் பயன்பாடு இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் 'மார்டிரிட்' நகர விமான நிலையத்தில் பயணிகள் பகுதியின் ஒரு பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர்.

பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள்.
பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவில் உள்ள மின் சியாங் மூங்கில் பாலம் உலகளவில் நீளமான பாலமாக இருக்கிறது.

மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் 10 பில்லியன் டாலர் மூங்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், சீனா சுமார் 50% பங்கைப் பெற்று முன்னணியிலுள்ளது. 2015-ம் ஆண்டு இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6,505 கோடி. அது 2015-ம் ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாக இந்திய விவசாயத்துறை அமைச்சகம் கூறுகிறது.

மூங்கில்மூங்கில்
வீட்டில் இடம் இருந்தாலும் மூங்கில் வளர்க்கலாம். அதற்காக முள்ளில்லா மூங்கில் ரகங்கள் கிடைக்கின்றன. சூழலுக்கு இத்தனை பயன்களைத் தரும் மூங்கிலைப் போற்ற வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: