26 செப்., 2021

ஜென் தியானம் அறிமுகம்



HOW TO MEDITATE FOR BEGINNERS -

ZEN MEDITATION IN TAMIL

421,881 views

May 25, 2018

Psychology in Tamil

1.38M subscribers

How to understand Zen and do Zen Meditation.

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

www.psychologyintamil.com

instagram.com/psychologyintamil/

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

www.drvsj.com

https://www.facebook.com/psychologyin...

#StayHome and learn zen #WithMe

 

Grateful thanks to

வா.சீ.ஜிதேந்திரா

Psychology in Tamil

and YouTube and all the others who made this video possible.

தத்துவஞானிகள் : பிளேட்டோ வாழ்க்கை வரலாறு


 LIFE HISTORY OF PLATO (PHILOSOPHER )

பிளேட்டோ வாழ்க்கை வரலாறு

@TAMIL FIRE

24,194 views

Jan 25, 2015

TAMIL FIRE

109K subscribers

Biography of Plato (Greek Philosopher) - பிளேட்டோ (தத்துவஞானி) வாழ்க்கை வரலாறு @TAMIL FIRE

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார். கிரேக்கத்தில் அப்போதெல்லாம் கட்டாய ராணுவச் சட்டம் இருந்ததால் பிளேட்டோ சிறிது காலம் ராணுவச் சேவையாற்றினார். போரில் கலந்துகொண்ட அனுபவமும் அவருக்கு உண்டு. மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2...

#Life_History_In_Tamil #Biography_In_Tamil #Life_Story_In_Tamil

Biography / Life history of famous people in Tamil Playlist

http://tiny.cc/llvtfz

Thirukkural Videos Playlist

http://tiny.cc/q6utfz

Thenkachi Ko Swaminathan Videos Playlist

http://tiny.cc/b4utfz

Thirukkural Whatsapp status Videos

http://tiny.cc/2avtfz

FAIR USE COPYRIGHT NOTICE

The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content.  Section 107 of the U.S. Copyright Act states:

“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”

This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.

If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably.  Thank you.

 

******

Please watch Thirukkural videos at Thirukkural Videos Playlist

http://tiny.cc/q6utfz

****

 

Grateful thanks to

TAMIL FIRE

and YouTube and all the others who made this video possible.

அறிவியல் உலகம் : செவ்வாய்க்கு ஒரு பயணம் !


செவ்வாய்க்கு ஒரு பயணாம் 

LIFE ON MARS! | TAMIL

VISAIPALAGAI

185,942 views

May 5, 2019

Visaipalagai

230K subscribers

Mars, which is also called sometimes as the Red Planet. Mars was not so lucky. Mars dried up. Mars is small, about half Earth’s diameter, so it cooled off faster than Earth did after their birth in the cloud of dust left over from the sun’s creation. Compared to its overall volume, more of Mars mass is exposed to the icy blackness of space. As it cooled, its iron-nickel core solidified. When this happened, we think, the Martian magnetic field shut down, robbing Mars of its protective shield.

In this video, we also discussed how humans live on Mars (SpaceX BFR mars mission) and are there any life or water on Mars?

 

Grateful thanks to

திரு.ரஞ்சித்குமார்

Visaipalagai

and YouTube and all the others who made this video possible. 

முன்னேற்றப் பாதை : வாய்ப்புகளை கைப்பற்றி சாதனைகள் படைக்க


வாய்ப்புகளை கைப்பற்றி

 சாதனைகள் படைக்க

HOW TO SEIZE OPPORTUNITIES  

TAMIL MOTIVATION | HISHAM.M

22,180 views

Feb 3, 2019

Hisham.M

394K subscribers

நம் கதவை தட்டும் வாய்ப்புகளை கைப்பற்றி 

சாதனைகள் படைக்க 4 ரகசியங்கள். 

Tamil Motivational video by Hisham.M

  Follow me

https://twitter.com/hishammohamed

https://instagram.com/hishamlk/

http://www.facebook.com/nhishammohamed

https://www.linkedin.com/in/hisham-mo...

Get More Motivational Videos and Tips - Subscribe https://goo.gl/4szuS4

Send a private message https://goo.gl/vprUQ8

#TamilMotivation #Hisham

 

Grateful thanks to

Hisham.M

and YouTube and all the others who made this video possible. 

வேதனைக்குரல்

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!
விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

 Agatha Chandrashekar

நன்றி :
Agatha Chandrashekar

இலக்கிய இன்பம் : மூதுரை பாடல்-23 - ஒளவையார்

அன்பின் நண்பர்களே!

வணக்கம்!!

இன்று நாம் காணவிருப்பது

"இலக்கியங்களில் தத்துவம்" பகுதியில்.......

       மூதுரை -- ஔவையார்
***********************************

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்

பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

கற்பிளவோ டொப்பர் கயவர்; கடுஞ் சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. 

அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். 

பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்தாலும் மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். 

வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீரில் தோன்றும் வடு அப்போதே மாறிவிடுவது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.


நன்றி :

இன்று ஒரு தகவல் : 1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம்


*1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம் பற்றி நம்மில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்*

 ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டது.  நான் எரிவாயு சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது.  புதிய சிலிண்டரை இணைத்து இயக்கிய போது, ​​நான் வாயு கசிவதை உணர்ந்தேன்.  நான் புதியதாக மாற்றிய எரிவாயு சிலிண்டரின் திறப்பானை Lock செய்து மூடிவிட்டேன்.

உடனடியாக  நான் ஒன்று அல்லது இரண்டு ஏரியா ஏஜென்சிகளை அழைத்தேன், ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள்  திங்களன்று ரிப்பேர் செய்ய ஆட்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.
 ஏதேனும் அவசர எண் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், எனவே Google ஐ முயற்சித்தேன்.  கூகிள் *1906* என்ற என்னை அழைக்கச் சொல்லி காண்பித்தது.  நான் *1906* என்ற எண்ணிற்கு முயற்சித்தேன்.  ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து  பேசினார்.  என் பிரச்சினையை அவரிடம் விளக்கினேன்.  ஒரு மணி நேரத்திற்குள் ஒரு நபர் பணிக்கு வருவார் என்று அவர் கூறினார்.  வருகைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும், ஒரு வேளை குழாய் (Tube) மோசமாகிவிட்டால் ஒழிய நான் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு இளம் வயது நபர் அரை மணி நேரத்திற்குள் வந்து, எரிவாயு சிலிண்டரை சரிபார்த்து சிலிண்டருக்கு ஒரு புதிய வாஷரை மாற்றினார்.  இது ஒரு சிறிய வேலை என்றார்.  அவர் எந்த ஊதியத்தையும் ஏற்கவில்லை.  இந்த சேவை மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் வழங்கப்படுகிறது. 

 அதே பெண்மணி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போன் செய்து, வேலைக்கு வந்தாரா, தங்களுடைய பிரச்சினையை சரி செய்து தந்தாரா என்று சோதித்தார்.

 *1906* என்கிற இந்த தொலைபேசி எண்ணை உங்களுக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 இது 24x7 சேவையாகும், இது அனைத்து எல்பிஜி நிறுவனங்களையும் உள்ளடக்கியது.

வாட்ஸப்பில் பெற்றது 

நூல் நயம் : வரலாற்றின் சுவட்டில் - பயணக் கட்டுரைகள் - வானதி


#Reading_Marathon_2021
ராஜேந்திரன் பிரகாஷ்
RM ID 074
இலக்கு: 43/50
நூல்: வரலாற்றின் சுவட்டில்.. பயணக் கட்டுரைகள்
ஆசிரியர்: வானதி
பக்கம்: 124
பதிப்பகம்: கிண்டில்

#நான்காம்_ஆண்டு_விழா_வாசிப்பு_போட்டி
#பயணம்_தொடர்பானவை

        பல காலக்கட்டங்களில் (2011~2018) அவரது blog இல் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, கிண்டிலில் ஏப்ரல் 2020 இல் வெளியிட்டுள்ளார். சில்பி என அறியப்பட்ட பி. எம். சீனிவாசன் அவர்களின் தென்னாட்டு செல்வங்கள் என்னும் நூல் எழுத்தாளரின் பயணத்திற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.

         வரலாற்று புனைவு நாவல்களை படிக்கும் போது, அந்த நாவல்களில் வரும் ஊர்களை சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் மேலிடும். குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலை படிப்பவர்களுக்கு பிற்கால சோழப் பேரரசின் முக்கியமான நகரங்களை பார்க்க தோன்றும். பிற்கால சோழ வரலாற்றை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலை தவிர பிற கோயில்களை பெரும்பலானோர் அறிந்திருக்க மாட்டோம். அப்படி நாம் வரலாற்று நாவல்களில் படித்த, ஆனால் அதிகம் கேள்விப்பட்டிராத ஊர்களுக்கு பயணம் சென்று, இந்த பயணிக் கட்டுரைகளை நமக்கு கொடுத்திருக்கிறார். பெரும்பாலான கோயில்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்கபட்டு வருகிறது.

#தஞ்சை 
     பெரும்பாலான கட்டுரைகள் சோழ மண்டலத்திலுள்ள, பிற்கால சோழர் ஆட்சியில் சிறப்பாக விளங்கிய ஊர்களை பற்றிய பயண கட்டுரைகள். கொடும்பாளூர், பழையாறை, பட்டீஸ்வரம், திரிபுவனம், திருவையாறு, திருமழபாடி, தாராசுரம் ஆகிய ஊர்களுக்கு பயணம் மேற்க்கொண்டு, அங்குள்ள சோழர்கால கோயில்களின் வரலாற்றைப் பற்றியும், அவற்றின் இன்றைய நிலை பற்றியும் கூறியிருக்கிறார்

        இந்த கோயில்களின் இன்றைய நிலையை படிக்கும் போது, நமது வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதலமடைந்துக் கொண்டிப்பாதாகவே தோன்றுகிறது. ஆலய நற்பணிகள் என்கிற பெயரில்,வரலாற்று கோயில்களில் உள்ள ஓவியங்களில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருப்பதும், நம்முடைய கையெழுத்து கிறுக்கல்களும், நமது முன்னோர்களின் கலை அறிவை, வருங்கால சந்ததியினர் அறியாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமது கையெழுத்து கிறுக்கல்கள் மற்றும் வண்ணங்களை சுரண்டுதல் போன்ற நமது நடவடிக்கைகளை நாம் மாற்ற வேண்டும்.

#காஞ்சி
      இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில். இந்த கோயிலின் மற்றொரு பெயர் திரு பரமேச்வர விண்ணகரம் என்று கூறிகிறார். 

       காஞ்சி கைலாசநாதர் கோயில் பற்றிய வரலாறும், அதிலுள்ள சிற்பங்கள் பற்றியும், கூடவே சிவகாமியின் சபதம் நாவலை பற்றியும், அஜந்தா ஒவியங்கள் போலவே இருக்கும் பல்லவர் கால ஓவியங்கள் பற்றியும், அவற்றின் இன்றைய நிலைப் பற்றியும் கூறியிருப்பது சிறப்பு.

#தூத்துக்குடி 
     பனிமய மாதா கோயில் & சந்தன மாரியம்மன் கோயில் வரலாறு பற்றிய குறிப்பு நமக்கு கிடைக்கிறது. 
 
#கோடிக்கரை_கோடியக்காடு 
       கோடியக்காட்டின் இயற்கை அழகை விவரித்துள்ளார். கூடவே பூங்குழலி ஆங்காங்கே குறுக்கே வந்துபோகிறாள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தின் மிச்சம், நமது வரலாற்றின் எச்சமாக அங்கு இருக்கிறது. இந்த இடத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

#தரங்கம்பாடி 
     பள்ளிக் காலத்தில் சுற்றுலா சென்ற ஊர். ஆனால் எழுத்தாளர் கூறியிருக்கும் இடங்களில் கோட்டையை தவிர வேறெதுவும் பார்க்கவில்லை. அவற்றையெல்லாம் மறுபடியும் சென்று பார்க்க வேண்டும்

#செஞ்சி_கோட்டை 
    பெரும்பாலானோர் அறிந்த இடம் செஞ்சி கோட்டை. ஆனால் அறியாத ஒரு இடம் குந்தவை ஜீனோலயா. குந்தவை பிராட்டியால் நிவந்தம் விடப்பட்டு திருமலையில் சமணர்களுக்காய் கட்டப்பட்ட கோயில். ஸ்ரீ அரிஹந்த்கிரி சமண மடம் பற்றியும், கோயில் மற்றும் அதிலுள்ள குகைகள், குகை ஓவியங்கள் பற்றியும் கூறியிருப்பது சிறப்பு

#சீனிவாசநல்லூர் - குரங்கு நாதர் கோயில்
     முசிறி அருகில் உள்ள கோயில். கி. பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. முதல் முதலாய் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று. 

#வீராணம்_ஏரி
        வீராணத்தை பற்றி எழுத்தாளர் கூறும் போதே, வந்தியதேவன் குதிரையில் செல்லும் காட்சி மனக் கண்ணில் ஒடியது.

நன்றி :

திரு.ராஜேந்திரன் பிரசாத் 
வாசிப்பை நேசிப்போம்

சிரித்து வாழவேண்டும்!

அருள்வாக்கு