31 டிச., 2007

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-2:

ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு...
ஓ, வெண்ணிலா!


வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.


அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!


"சூரியனைக் கிள்ளி" (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

கருத்துகள் இல்லை: