7 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-10: "படிக்க வேண்டும் புதிய பாடம்!"

படிக்க வேண்டும் புதிய பாடம்!

கற்ற கல்வி,
ஒரு படிவத்தை நிரப்ப
பயன்படவில்லை;
உழைப்பின் பெருமையை
உணர்த்தவில்லை;
பெற்றோர் அருமையை
போற்றவில்லை.
தன்னம்பிக்கை என்னும்
மூன்றாவது கையை
வழங்க வில்லை;
தேசியப் பார்வைக்கு
பழக்கவில்லை;
மொழிகளில் பயிற்சி
புகட்ட வில்லை.
நிறைந்த சபையில்,
தவறைத் தவரென்றுசொல்லும்
துணிவைக்கொடுக்கவில்லை;
மூடப் பழக்கங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
எங்கோ பிழை இருக்கிறது!
கற்பிப்பவர்களுக்கு
முதலில்கற்றுக் கொடுக்கவேண்டும்!!

கருத்துகள் இல்லை: