16 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-22: "நாம் மனிதர்கள்!"

எனக்குப் பிடித்த கவிதை-22

கை அசைத்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
'பயந்தாங்கொள்ளி' காகம் அல்ல..

ஆபத்தை அறிந்தாலே
மணலுக்குள் தலையை
மறைத்துக்கொள்ள
'முட்டாள்' நெருப்புக் கோழியுமல்ல..

தொட்டாலே
சுருண்டு கொள்ள
'பரிதாப' மரவட்டையும் அல்ல...

வருவது எதுவாயினும்
எதிர்கொள்ள வேண்டும்..
உறுதியோடு நின்று
மகுடம் சூடவேண்டும்!

ஏனெனில்,
நாம்..
மனிதர்கள்!

நன்றி :- அவள் விகடன், ஆகஸ்ட் 4, 2006

கருத்துகள் இல்லை: