3 மார்., 2008

கேள்வியும் பதிலும்-9: "புதுக்கவிதை என்றால் என்ன?"

புதுக்கவிதை என்றால் என்ன?

கவிஞர் மு.மேத்தா

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத -

கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக் கொண்ட

புதிய
மக்களாட்சி முறையே
புதுக்கவிதை!

கவிஞர் மு.மேத்தாவின் கவிதை, 'கேளுங்கள் கொடுக்கப்படுமிலிருந்து'

"ஊர்வலம்"
கவிஞர் மு.மேத்தா
திருமகள் நிலையம்
55, வெங்கட் நாராயணா ரோடு
தி.நகர்
சென்னை-600017

கருத்துகள் இல்லை: