21 செப்., 2011

எனக்குப் பிடித்த கவிதை-66: கவிஞர் ஜெ.முருகனின் கவிதை

ஆறாயிரத்துக்கு
வித்துவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோ மீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது...
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு!

கருத்துகள் இல்லை: